கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 31 அக்டோபர், 2013

குமரிக்கண்டம்

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்.



இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது, இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டி
ருக்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா மடகாஸ்கர் தென்னாப்பிரிக்கா இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக் கண்டம்.

ஏழுதெங்க நாடு ஏழுமதுரை நாடு ஏழுமுன்பலை நாடு ஏழுபின்பலை நாடு ஏழுகுன்ற நாடு ஏழுகுனக்கரை நாடு ஏழுகுரும்பனை நாடு என இந் நிலப் பரப்பில் நாற்பத் தொன்பது நாடுகள் இருந்துள்ளன.

பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன.

தமிழ்நாட்டுச் செய்தி
கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”
(வீடியோஇணைப்பு)



இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற
 பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும்
பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம்
என்று பெருமையுடன் கூறுவோம்.

சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி
தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட
குமரிப்பெருங்கண்டம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று
ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம்
மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த்
தமிழ் பிறந்தது இங்குதான் இன்னும் பல வரலாற்று
அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிரு
க்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா,
மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும்
கிழக்கில் உள்ளசில சிறு, சிறு தீவுகளையெல்லாம்
இணைத்தவாறு இருந்த ஒருபிரம்மாண்ட நிலப்பரப்பு

தான் குமரிக் கண்டம்.ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு,
ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்
பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன.

பறுளி, குமரி என்ற இரண்டுமாபெரும் ஆறுகள்
ஓடியுள்ளன.

குமரிக்கொடு மணிமலை என இரண்டு மலைகள் இருந்து
ள்ளன தென்மதுரை  கபாடபுரம் முத்தூர் என பிரம்மாண்
டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மை
யான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன்
நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது
தான்.நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில்
மூன்றுதமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து
நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்
மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன் சிவன்
முருகர்அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து
நடத்தப்பட்டது.

இதில் பரிபாடல் முதுநாரை முடுகுருக்கு கலரியவிரை
பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில்
கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
மேலும் அகத்தியம தொல்காப்பியம் பூதபுராணம்
மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு
1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப் பட்டது. இதில்
அகநானூறுபுறநானூறு நாலடியார் திருக்குறள்
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.