கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 28 டிசம்பர், 2009

சங்கீதம்-2

நாதம் நாதத்தின் மறுபெயர் இசையொலி ஆகும் இந்த நாதமே சங்கீதத்திற்கு ஆதாரமாகும் நாதத்திலிருந்து சுருதிகளும்,சுருதிகளில் இருந்து ஸ்வரங்களும் ஸ்வரங்களில் இருந்து ராகங்களும் உருவாகின்றன நாதம் இரண்டு வகைப்படும் அவையாவன (1 )ஆகநாதம் (2 ) அனாகநாதம் (1 )ஆகநாதம் மனிதனுடைய முயற்சியினால் உற்பத்தி யாக்கப்படும் நாதம் ஆகநாதம் எனப்படும் நாம் கேட்கும் சங்கீதம் ,வாத்தியங்களினால் வாசிக்கப்படும் சங்கீதம் ,பாடும் சங்கீதம் நாம் படிக்கும் சங்கீத சாஸ்த்திரங்கள் இவை எல்லாம் ஆகநாதத்தை பற்றியதே ஆகும். (2 ) அனாகநாதம் மனிதனுடைய முயற்சி இல்லாமல் இயற்கையினாலே கேட்கப்படும் நாதம் அனாகநாதம் ஆகும் அனாகநாதத்தின் மர்மங்களை யோகிகள் நன்கு அறிவார்கள் கடல் அலைகள் எழுப்பும் சங்கீதம் ஆனாகநாதம் எனப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.