உங்கள் ராசிக்கு 5-ல் குரு உலவுவதாலும், ஜன்ம ராசியையும், 9, 11-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதாலும் விசேடமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். மன மகிழ்ச்சி கூடும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியத்தைப் பெறுவீர்கள். பண வரவு திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும். சாதுக்கள், மகான்களைச் சந்தித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மக்களால் உங்கள் மதிப்பு உயரும். தந்தையாலும், சகோதர, சகோதரிகளாலும் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். சனி 11-ல் உலவுவதால் செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். மே 7-ஆம் தேதிக்குள் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நீண்ட நாளைய எண்ணங்களும் இப்போது நிறைவேறும். சொத்துக்கள் சேரும். நிலபுலங்களால் ஆதாயமும் கிடைக்கும்.
மே 8-ஆம் தேதி முதல் குரு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். சுப காரியத்துக்காகக் கடன் வாங்க வேண்டிவரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு உங்கள் ஜன்ம ராசிக்கும் கேது 7-ஆமிடத்துக்கும் மாறுவதும் சிறப்பாகாது. இந்த ஆண்டு முழுவதுமே ராகு, கேது ஆகியோரின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.
கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். மதிப்பு குறையும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
உடல்நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சனி தன் உச்ச ராசியில் இருப்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் அதிகம் சங்கடங்கள் ஏற்படாதவாறு நீங்கள் காக்கப்படுவீர்கள். ஜாதக பலமும் சாதகமாக இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. மே 8 முதல் குரு பிரீதி செய்வது அவசியமாகும். நவம்பர் 15 முதல் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8, 9.
திசை: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு.
தெய்வம்: சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி.
மே 8-ஆம் தேதி முதல் குரு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். சுப காரியத்துக்காகக் கடன் வாங்க வேண்டிவரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு உங்கள் ஜன்ம ராசிக்கும் கேது 7-ஆமிடத்துக்கும் மாறுவதும் சிறப்பாகாது. இந்த ஆண்டு முழுவதுமே ராகு, கேது ஆகியோரின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.
கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். மதிப்பு குறையும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
உடல்நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சனி தன் உச்ச ராசியில் இருப்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் அதிகம் சங்கடங்கள் ஏற்படாதவாறு நீங்கள் காக்கப்படுவீர்கள். ஜாதக பலமும் சாதகமாக இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. மே 8 முதல் குரு பிரீதி செய்வது அவசியமாகும். நவம்பர் 15 முதல் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8, 9.
திசை: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு.
தெய்வம்: சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.