ராசிநாதன் குரு 4-ல் அமர்ந்து 10-ஆமிடத்தையும், சனியையும் பார்க்கிறார். 8, 12-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதால் செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.
சோர்வுக்கு இடம் தரலாகாது. நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஜன்ம ராசியில் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க முடியாமல் போகும். அதனால் உடல் அசைதி ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம். 7-ல் கேது இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது. கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும்.
புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் புரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு நிலவிவரும்.
மே 8-ஆம் தேதி முதல் குரு 5-ஆமிடம் மாறுவது விசேடமாகும். மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், சட்ட வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை உருவாகும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 12-ஆமிடத்துக்கு மாறுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். கனவு தொல்லை தரும். அதனால் தூக்கம் கெடும். கேது 6-ஆமிடத்துக்கு மாறுவதால் மனத்துணிச்சல் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 11-ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுகிறார்.
உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டோன் 11-ல் உலவுவதாலும் தன காரகனால் பார்க்கப்படுவதாலும் ஏராளமான செல்வம் குவியப் போகிறது. 3-ஆம் வீட்டோன் சனி 11-ல் இருப்பதால் சகோதரராலும் அனுகூலம் உண்டாகும். முயற்சி பலிதமாகும். வீடு மாற்றம் நல்லவிதமாக அமையும். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது சுலபமாக நிறைவேறும்.
வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல திருப்பத்தைக் காண்பீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும்.
கால நேரத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் பருத்தி புடவையாய் காய்த்தது போலாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6, 8.
திசை: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
தெய்வம்: சிவன், முருகன்.
சோர்வுக்கு இடம் தரலாகாது. நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஜன்ம ராசியில் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க முடியாமல் போகும். அதனால் உடல் அசைதி ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம். 7-ல் கேது இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது. கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும்.
புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் புரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு நிலவிவரும்.
மே 8-ஆம் தேதி முதல் குரு 5-ஆமிடம் மாறுவது விசேடமாகும். மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், சட்ட வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை உருவாகும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 12-ஆமிடத்துக்கு மாறுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். கனவு தொல்லை தரும். அதனால் தூக்கம் கெடும். கேது 6-ஆமிடத்துக்கு மாறுவதால் மனத்துணிச்சல் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 11-ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுகிறார்.
உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டோன் 11-ல் உலவுவதாலும் தன காரகனால் பார்க்கப்படுவதாலும் ஏராளமான செல்வம் குவியப் போகிறது. 3-ஆம் வீட்டோன் சனி 11-ல் இருப்பதால் சகோதரராலும் அனுகூலம் உண்டாகும். முயற்சி பலிதமாகும். வீடு மாற்றம் நல்லவிதமாக அமையும். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது சுலபமாக நிறைவேறும்.
வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல திருப்பத்தைக் காண்பீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும்.
கால நேரத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் பருத்தி புடவையாய் காய்த்தது போலாகும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6, 8.
திசை: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
தெய்வம்: சிவன், முருகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.