ஆராரோ ஆராரோ
ஆரியவரோ ஆரியவரோ
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்காய்
கண்ணை யடித்தா ரார்
கற்பகத்தைத் தொட்டா ரார்
தொட்டவரைச் சொல்லியழு தோள்
விலங்கு போட்டு வைப்போம்
அடிததவரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணி வைப்போம்
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே
மாமன் அடித்தானோ
மகிழ்ந்தெடுக்கும் கையாலே
அண்ணன் அடித்தானோ
அனைத்தெடுக்குங் கையாலே
ஆரியவரோ ஆரியவரோ
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்காய்
கண்ணை யடித்தா ரார்
கற்பகத்தைத் தொட்டா ரார்
தொட்டவரைச் சொல்லியழு தோள்
விலங்கு போட்டு வைப்போம்
அடிததவரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணி வைப்போம்
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே
மாமன் அடித்தானோ
மகிழ்ந்தெடுக்கும் கையாலே
அண்ணன் அடித்தானோ
அனைத்தெடுக்குங் கையாலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.