நீதி நூல்-1
மூதுரை-2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே -அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்
கருத்து
நல்ல குணங்கள் உள்ள ஒருவருக்கு செய்த
உதவியானது கல்லில் எழுதபட்ட எழுத்து
போல் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்
அதாவது உதவியை பெற்ற நல்லவர்கள்
எப்போதும் தாங்கள் பெற்ற உதவியை
நினைவில் வைத்திருப்பார்கள் ஆனால்
நல்ல குணங்கள் அற்ற ஒருவருக்கு செய்த
உதவியானது நீர் மேல் எழுதபட்ட எழுத்து
போன்றது அதாவது நல்ல குணங்கள்
அற்றவர்கள் தாங்கள் பெற்ற உதவியை
உடனே மறந்து விடுவார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.