ஞாயிறு, 27 டிசம்பர், 2009
மூதுரை
நீதி நூல் -1
மூதுரை-1
நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா -நின்று
தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்
கருத்து
"தென்னை மரம் சிறியதாக இருக்கும் போது
அதற்கு நாம் தண்ணீர் ஊற்றுகிறோம்அது
வளர்ந்து காய்த்து எமக்கு இளநீரை தருகிறது"
அதாவது நாம் தென்னை மரத்தின் அடியில்
ஊற்றிய தண்ணீருக்கு நன்றியாக அது தனது
தலையால் இளநீரை எமக்கு தருகிறது
அதனைப்போல நாம் மற்றவர்களுக்கு உதவுதல்
வேண்டும் அவ்வாறு உதவிசெய்தால் நாம்
எதிர்பார்க்காமலே எங்களுக்கு தேவையான
உதவி கிடைக்கும் ஆனால் நாம் எப்போதும்
பயன் கருதாமல் மற்றவர்களுக்கு உதவ முன்
வர வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.