கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 8 ஜனவரி, 2010

மூதுரை



நீதி நூல் - 1

மூதுரை -4

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் 
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல் உலகில் 
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு 
எல்லார்க்கும் பெய்யும் மழை 

கருத்து 

நெற்பயிருக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியாக 
ஓடி அது தான் ஓடுகின்ற இடத்தில் இருக்கின்ற 
புல் பூண்டுகளின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது 
அதனைப்  போல உலகில் வாழுகின்ற நல்லவர் 
ஒருவருக்காக பெய்கின்ற மழையானது மற்றவர்
களுக்கும் பயன்படுகின்றது அதாவது நல்லவர் 
ஒருவரால் உலகம் பயன் பெறும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.