புதன், 20 ஜனவரி, 2010
சிறுவர்கதைகள் - 1 (பூனையும்நரியும்-1)
பூனையும் நரியும்
ஒரு சிற்றூரில் ஒரு குடியானவன் வசித்து
வந்தான் அவனிடம் ஒரு பூனை இருந்தது
அந்த பூனை பலவிதமான குறும்புகளை
குடியானவனின் வீட்டிலும் அயலிலும்
குறும்புகளை செய்து வந்தது. இதனால்
அவனது குடிசைக்கு அயலில் உள்ளவர்கள்
பலர் குடியானவனிற்கு பகைவர்கள்
ஆனார்கள் இதைகுடியானவன் பூனையிடம்
பலமுறை எச்சரித்தும் பூனை கேட்கவில்லை.
இப்படியே பல முறை எச்சரித்தும் பூனை
கேட்காததினால் அந்தகுடியானவன் பூனையை
ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி தூக்கிக்
கொண்டு போய் காட்டில் விட்டு விட்டு
வந்துவிட்டான் . காட்டில் வசித்து வந்த
வேடன் ஒருவனின் குடிசையின் பரனின்
மேல் குடியானவனின் பூனை ஏறி அடைக்கலம்
தேடிக்கொண்டது அதன் பின் தனக்கு பசிக்கும்
போது இறங்கி குடிசையை விட்டு வெளியே
வந்து பறவையையோ அல்லது எலியையோ
பிடித்து கொன்று உணவாக உட்கொண்டு
விட்டு வேடனின் குடிசைக்கு திரும்பி
வந்து படுத்துவிடும்.
(தொடரும் )
Labels:
சிறுவர் பகுதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.