செவ்வாய், 26 ஜனவரி, 2010
குழம்பு (கூட்டு)வகைகள்-2
கோழி இறைச்சி குழம்பு
தேவையானபொருட்கள்
கோழி இறைச்சி -500கிராம்
பால் -தேவையானளவு
மிளகாய்த்தூள் -தேவையானளவு
வெங்காயம்(வெட்டியது ) -அரைப்பாதி
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரை தேக்கரண்டி
கடுகு-அரை தேக்கரண்டி
உப்பு-தேவையானளவு
எண்ணெய்-தேவையானளவு
கரம்மசாலத்தூள் -சிறிதளவு (விரும்பினாள்)
கருவப்பிலை(நறுக்கியது) -சிறிதளவு
உள்ளி(வெட்டியது) -2 பற்கள்
மஞ்சள்தூள் -சிறிதளவு
வெட்டிய தக்காளிப்பழம்(சிறிய) -1
செய்முறை
1 .ஓரு பலகையில் கோழி இறைச்சியை
வைக்கவும் .
2 .அதன் பின்பு ஓரு கூரான கத்தியால் அதன்
தோலை அகற்றிவிட்டு தேவையான
அளவில் துண்டுகளாக வெட்டவும்.
3 . வெட்டிய துண்டுகளை ஓரு பாத்திரத்தில்
போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள்
தூளை போட்டு கழுவவும்.
4 . கழுவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போட்டு வைக்கவும்.
5 .அதன் பின்பு அடுப்பில் தாட்சியை
(வாணலியை)வைத்து அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
6 .எண்ணெய் சூடானதும் அதில் கடுகை
போட்டு வெடிக்க விடவும் .
7 .கடுகு வெடித்ததும் அதில் வெங்காயம்,
உள்ளி (பூண்டு),கருவப்பிலை,வெட்டிய
தக்காளிப்பழம்(விரும்பினாள் ) சோம்பு
(பெருஞ்சீரகம்)ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.
8 .தாளித்த பின்பு அதில் வெட்டி மஞ்சள்தூள்
போட்டு கழுவிய கோழி இறைச்சி
துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி
சிறிது நேரம் மூடி வேக விடவும்.
9 , அதன் பின்பு அதில் சிறிதளவு தண்ணீர்,
மிளகாய்த்தூள்,கரம்மசாலத்தூள்
ஆகியவற்றை போட்டு ஓரளவு
வேகவிடவும் .
10 .கோழி இறைச்சி துண்டுகள் ஓரளவு
வெந்ததும் அதனுடன் பாலை விட்டு
கலந்து வேகவிடவும்.
11 . கோழி இறைச்சி வெந்து கறி ஓரளவு
தடிப்பானதும் கறியை அடுப்பிலிருந்து
இறக்கவும்.
12 .அதன் பின்பு சுத்தமான சுவையான
செய்வதிற்கு இலகுவான கோழி
இறைச்சி கறி தயாராகிவிடும்.
13 . பின்பு ஓரு தட்டில் சோற்றினை
(சாதம்),இடியப்பம்,பரோட்டா,ரொட்டி
பாண் துண்டுகள் ,சப்பாத்தி,புட்டு,இட்லி,
ஆகியவற்றில் ஒன்றினை வைத்து
அதனுடன் கோழி இறைச்சி குழம்பு(கூட்டு)
கறியையும் வைத்து பரிமாறவும் .
Labels:
சமையல் குறிப்புக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.