கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 1 பிப்ரவரி, 2010

குழம்பு (கூட்டு )வகைகள்-3

முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருட்கள் முருங்கைக்காய் (தோல்சீவிய)-தேவையானளவு பசுப்பால் /தேங்காய்பால் -தேவையானளவு கருவப்பிலை -சிறிதளவு உள்ளி(பூண்டு)(வெட்டியது)-சிறிதளவு மிளகாய்த்தூள்-தேவையானளவு பழப்புளி-சிறிதளவு உப்பு -தேவையானளவு தாளிக்க தேவையான பொருட்கள் வெங்காயம்(சிறிதாக வெட்டியது) -1 /2பாதி பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது)-(1 -2 ) கடுகு -அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம்(சோம்பு)-அரைதேக்கரண்டி எண்ணெய்-சிறிதளவு செய்முறை அடுப்பில் வாணலியை(தாட்சியை)வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில் கடுகை போட்டு வெடிக்கவிடவும். கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம் (சோம்பு),கருவப்பிலை,உள்ளி(பூண்டு), பச்சைமிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் . தாளித்த பின்பு அதனுடன் வெட்டி சுத்தம் செய்து துண்டுகளாக்கிய முருங்கைக் காய்களை போட்டு நன்றாக கலந்து ஓரளவு பொரிக்கவும் . இவையாவும் தேவையானளவு பொரிந்ததும் அதனுடன் மிளகாய்த்தூளை போட்டு கலந்து மிளகாய்த்தூளின் பச்சவாசனை போகும்வரை பொரிய விடவும் . அதன் பின்பு அதனுடன் பழப்புளி, தண்ணீர் ,உப்பு ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடவும். குழம்பு ஓரளவு கொதித்த பின்பு அதனுடன் பாலை கலந்து நன்றாக கொதிக்கவிடவும் . இவையாவும் நன்றாக கொதித்த பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை(வாணலியை)இறக்கிவைக்கவும். இப்போது சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான சத்தான முருங்கைக் காய் குழம்பு தயாராகி விட்டது. அதன் பின்பு ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை) , புட்டினை,இடியப்பத்தை,பரோட்டாவை, ரொட்டியை,சப்பாத்தியை,தோசையை,இட்லியை, வைத்து அதனுடன் இக்குழம்பை விட்டு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.