பழந்தமிழ் வழக்கில் குறுநிலப் பகுதிகளான
நாட்டுப் பிரிவுகளிலே தலைமை அதிகாரங்களைப்
பெற்றிருந்தவர்களைக் கோ என்று குறிப்பிடுவது
வழக்கம். அவ்வண்ணமாக கி.மு. 2ஆம்
நூற்றாண்டிலும் ஆனைக்கோட்டை பகுதியிலே
கோ என வழங்கிய தலைவர் இருந்திருக்கலாம் என
கருதலாம்.அகித்தி ஜாதகம் அதே காலமளவில்
ஆட்சி புரிந்த ஒரு சிற்றரசைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில்
தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சில அரிய
காசுகள் கிடைத்துள்ளன.அவற்றிலும் நாக பொலம்
என்ற வாசகம் ஒரு நாணத்திற் காணப்படுகின்றது.
நாக அரசன் வழங்கிய காசு என்று அதனை விளக்கலாம்.
வியாழன், 10 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.