கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

கூழ் வகைகள் - 1










ஆடிக்கூழ்


இது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 
மிக மிக பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவு 
வகை ஆகும் 

















தேவையான பொருட்கள்.

அரிசிமா - 1/2 கப் 
 பயறு - 1/4 கப் 
தேங்காய்பால் - 2 கப் 
பனங்கட்டி - 3 /4 கப்  
தேங்காய்ச்சொட்டு - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 




செய்முறை

1 .பயறு ,அரிசிமாவை ஆகியவற்றை
    தனித்தனியாக வெறும் சட்டியில்
    போட்டு வறுக்கவும்.

 2 .இரண்டு கப் தண்ணீரை கொதிக்க
     வைத்து அதனுள் வறுத்த பயறைப்
     போட்டு அவிய விடவும்.

3 . பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி
    மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து
   அதனுள் விட்டு மா கட்டிபடாமல்
    இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.

4 . மா அவிந்ததும் (வெந்ததும்) (கூழ்
      தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி,
     உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகிய
     வற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

5 .சுடச்சுட அருந்த சுவையான
    ஆடிக்கூழ் தயார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.