ஆடிக்கூழ் இது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் மிக மிக பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவு வகை ஆகும் தேவையான பொருட்கள். அரிசிமா - 1/2 கப் பயறு - 1/4 கப் தேங்காய்பால் - 2 கப் பனங்கட்டி - 3 /4 கப் தேங்காய்ச்சொட்டு - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை 1 .பயறு ,அரிசிமாவை ஆகியவற்றை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும். 2 .இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுள் வறுத்த பயறைப் போட்டு அவிய விடவும். 3 . பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விட்டு மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும். 4 . மா அவிந்ததும் (வெந்ததும்) (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி, உப்பு,தேங்காய்ச்சொட்டு ஆகிய வற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும். 5 .சுடச்சுட அருந்த சுவையான ஆடிக்கூழ் தயார்! |
வியாழன், 10 ஜூன், 2010
கூழ் வகைகள் - 1
Labels:
சமையல் குறிப்புக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.