சிம்ம ராசி
எப்போதும் யாருக்காகவாது ஏதேனும் ஒரு விதத்தில் உதவும் மனம் பெற்ற,ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பதில் வல்லவர்களாகிய சிம்ம ராசி அன்பர்களுக்கு… இவ்வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்கள் 1, 3, 5, 9 இந்த எண்களில்,அல்லது கூட்டுத் தொகையில் எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும்,அது சாதகமாக முடியும்.மேலும் இந்த எண்களுக்கு உரிய கிரக வழிபாட்டினை செய்வதன் மூலம் மேலும் வெற்றிகளைப் பெற முடியும். 1, 3, 5, 9 ஆகிய எண்களின் ரத்தினம் மற்றும் யந்திர வழிபாடு செய்வதன் மூலம் வெற்றிகளை எளிதாக் கிக்கொள்ள முடியும். மாணிக்க மோதிரம், மரகதப்பச்சை மோதிரம், பவள மோதிரம் மற்றும் குரு யந்திரம் பயன்படுத்தினால் பலன் கூடும். பலன்கள் : உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்,தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள், மனக்குழப்பங்கள் நீங்கி மனம் அமைதி பெறும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்,தன வரவு தாராளமாக இருக்கும், உங்களது முயற்சியில் வெற்றி கிடைக்கும்,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பேச்சு திறமையால் முன்னேற்றம் காண்பீர்கள்,புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்,செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும்,வீடு மற்றும் சொத்து சேர்க்கை உண்டாகும்,பணவரவு பலவழிகளில் குவியும்,மன தடுமாற்றம் நீங்கும்,ஆபரண சேர்க்கை உண்டாகும், சகோதர்கள் வழியில் நன்மை கிடைக்கும்,வீடு சம்பந்தபட்ட தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்,வாரிசுகளின் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும்,குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்,குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை நீங்கும்,பிள்ளைகளால் பெருமை உண்டாகும், குழந்தைகளின் முன்னேற்றம் மனதிற்கு உற்சாகமளிக்கும், கோர்ட் வழக்கு சாதக மாக அமையும்,கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் தீரும்,எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள், கௌரவம் அதிகரிக்கும், கடின உழைப்பால் புகழ்அடைவீர்கள், புதிய முயற்சிகளால் நன்மையடைவீர்கள், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்,சுயதொழிலில் ஏற்றம் காண்பீர்கள், சகல சௌபாக் கியங்களையும் பெறுவீர்கள்.
வெள்ளி, 31 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.