கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 24 டிசம்பர், 2009

இனிப்பு வகைகள்-1

மைசூர்பாகு

இனிப்பு பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும் இதில் மாச்சத்து , இலிப்பிட்டு,கொழுப்பு சத்து போன்ற பல சத்துகள் அடங்கியது அத்துடன் மிக மிக சுவையானதும் ஆகும்


தேவையான பொருட்கள்

கடலை மா - 1 / 2 சுண்டு
சீனி (சக்கரை ) -1 சுண்டு
நெய் - 150 கிராம்
தண்ணீர் - 1 /2 கப்


செய்முறை
  1. அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அதில் சீனி (சக்கரை) ,தண்ணீர் ஆகியவற்றை போட்டு காச்சவும்.
  2. சீனி (சக்கரை )மெல்லிய கம்பி பதமாக வரும் வரை நன்றாக காச்சவும்.
  3. அதன் பின்பு இதனுடன் கடலை மாவை சிறிது சிறிதாக தூவி நன்றாக கலந்து கட்டிபடாமல் கிளறவும்.
  4. முழுவதும் நன்றாக கலந்த பின்பு நெய்யை இடையிடையே சேர்த்து கிளறவும்.
  5. அதன் பின்பு இக்கலவை தாட்சியில் (வாணலியில் ) ஒட்டாமல் திரளும் பதத்தில்வரும் போது இக்கலவை உள்ள தாட்சியை (வாணலியை ) இறக்கவும்.
  6. பின்பு இறக்கிய தாட்சியில் (வாணலியில் )உள்ள கலவையை நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி பரப்பவும் .
  7. அழுத்தி பரப்பிய பின்பு சூடாக இருக்கும் போது தேவையான அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.