கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 15 டிசம்பர், 2009

எழுதுகருவிகள்-1

(1 )முதல் முதலாக பென்சில் பதினாறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. (2 )முதன் முதலாக பென்சிலை சுவிட்ஸ்சலாந்து நாட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கான்ராட் கெஸ்னர் என்பவரால் 1565 ல் அறிமுகப்படுத்தபட்டது . (3 )இங்கிலாந்தில் உள்ள குப்பிரியா பகுதியில் 1564 ம் ஆண்டு கிராபைட் கல் மூலம் கடதாசியில் எழுதலாம் என கண்டுபிடிக்கபட்டது . (4 )மரப்பட்டையின் உள்ளே கிராபைட் குச்சியை செருக்கி பென்சில் தயாரிக்கபட்டது . (5 )முதல்முதலில் பிரஸ்பட்டன்(ப்ரொபல்லிங்) என்ற பென்சிலை ஜெர்மனியை சேர்ந்த ஜான் ஃபேபர் என்பவர் கண்டு பிடித்தார் . (6 )தற்போது எலக்ரானிக் பொரூட்கலினை தயாரித்து உலகபுகழ் பெற்றிருக்கும் ஷார்ப் கார்ப்பரேஷேன் நிறுவனம் 1912 ல்"டோக்கியோ மெட்டல் வேர்க்ஸ்" என்ற பெயரில் ஜப்பானில் ஆரம்பிக்கபட்டது. இந்த நிறுவனம் 1915 ம்ஆண்டு உலோகத்தினாலான பிரஸ்பட்டன் பென்சிலைத் தயாரித்தது இந்த பென்சிலுக்கு பெயர் எவர் - ஷாப் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.