கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நன்னெறி

நன்னெறி -2

(1 )பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
     பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம்-பிறர்க்குதவி
    செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயன்முகத்து
    பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

பதவுரை

பிறர்க்குஉதவி செய்யார் -பிறருக்கு உபகாரம் செய்யாத ,

கருங்கடல் நீர்                       - கரிய கடலின் நீரை ,

புயல் சென்று முகந்து -மேகமானது போய் கொண்டு வந்து,

பிறருக்கு பெய்யாக் கொடுக்கும் -பிறருக்கு
                                                                       பெய்து
                                                                      கொடுக்கும்

அதுபோல

பிறருக்கு உதவி செய்யார்
பெருஞ்செல்வம்                                    -பிறருக்கு
                                                                    உபகாரஞ்
                                                                   செய்யாதவர்
                                                                   உடைய
                                                                   பெரிய
                                                                   செல்வமானது ,

வேறு                                                          -பிறதேயாயினும்


பிறருக்கு  உதவி ஆக்குபவர்
பேறு ஆம்                                                - பிறருக்கு
                                                                     உபகாரஞ்
                                                                     செய்பவருடைய
                                                                      செல்வமாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.